மியன்மாரில் சுரங்க வெடிபொருட்கள் வெடித்ததில் 46 பேர் பலி!

மியன்மாரில் சுரங்க அகழ்விற்காக வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் வெடித்துச் சிதறியதில் 46 பேர் உயிரிழந்துள்ளனர்.

மியன்மார், நாம்காம் நகரம் அருகேவுள்ள காவுன்டப் கிராமத்திலுள்ள கட்டடமொன்றில் சுரங்கத்தில் பாறைகளைத் தகர்க்கப் பயன்படுத்தப்படும் வெடிபொருள்கள் வைக்கப்பட்டிருந்தன.

அவை திடீரென நேற்று (31) அடுத்தடுத்து வெடித்துச் சிதறின.

இதில் 6 சிறுவர்கள் உள்பட 46 போ் உயிரிழந்துள்ளதோடு மேலும் 74 பேர் பலத்த காயமடைந்துள்ளதாக மியன்மார் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version