முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனம் வழங்கி வைப்பு!

வடக்கு மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தரம் 3 சேவைக்கு தெரிவாகிய 114 உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (12) வழங்கப்பட்டன.

யாழ்.கைதடியிலுள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் தவதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி றஜீவன், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளர் சு.கபிலன், வடக்கு மாகாண பிரதம செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள், மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் கலந்துகொண்டு நியமனக் கடிதங்களை வழங்கிவைத்தனர்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version