புத்தளம் – முந்தல் – நவதன்குளம் பகுதியில் காரும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதோடு 10 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று(12) காலையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில், காரில் பயணித்த இரண்டு பெண்களும், ஆண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


யாழ் நகர மத்தியில் மீட்கப்பட்ட 7 மாத கரு: நீதவான் விசாரணை உத்தரவு!
பயங்கரவாதச் சட்டத்துக்கு எதிராக யாழில் போராட்டம்!
சிறப்பாக இடம்பெற்ற கச்சதீவு அந்தோணியார் ஆலய பெருந்திருவிழா : 10 ஆயிரம் வரையிலான பக்தர்கள் பங்கேற்பு!
சந்தைக்கு இன்று முதல் எரிவாயு விநியோகம் – லாஃப்ஸ் நிறுவனம் அறிவிப்பு!