முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் நிகழ்வு, யாழ் மாநகர சபையில் இன்று(14) இடம் பெற்றது.
யாழ் மாநகர சபையின் அமர்வு முதல்வர் திருமதி வி. மதிவதனி தலைமையில் ஆரம்பமாகியது.
அமர்வு ஆரம்பமாக முன்னதாக முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்கள் நினைவு கூரப்பட்டார்கள்.
சபா மண்டபத்தில் வைக்கப்பட்ட நினைவு படத்திற்கு ஈகைச் சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில், ஈ.பி.டி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சியின் உறுப்பினர்கள் தவிர ஏனைய உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்!
உக்ரைனின் வணிக வளாகத்தின் மீது ரஷ்யா நடாத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் 5 பேர் பலி: 67 பேர் காயம்!
வடக்கில் இராணுவ வசமுள்ள காணிகளை விடுவிக்க நாடாளுமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல்!
விசாமிகள் வைத்த தீயால் பல ஏக்கரில் தீ பரவல்: பயன்தரு மரங்கள் அழிவு!