video click….
நாடு தழுவிய ரீதியில் அரச மருத்துவ அதிகாரிகள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்களும் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.



இன்று(23) காலை 8.00 மணி முதல் 48 மணித்தியால பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட்டுள்ளனர்.



சுகாதார அமைச்சு வழங்கிய இணக்கப்பாடுகளை நிறைவேற்றத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த பணிப் புறக்கணிப்பு இடம்பெற்றுவருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.



இதன்காரணமாக, யாழ்.போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு இயங்கவில்லை. அதனால் தொலை தூரங்களிலிருந்து வருகைதந்த நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு திரும்புச் சென்றனர்.



தாய்லாந்து – பேங்கொக்கில் மதுபானக்கடையில் தீ விபத்து : 27 பேர் பலி: பலர் காயம்!
தமிழ் மற்றும் முஸ்ஸிம் கட்சிகள் கொழும்பில் உடன்படிக்கை கைச்சாத்து!
டெங்கு காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் இன்று முதல் ஆரம்பம்!
பலாலி மக்கள் காணிகளை விடுவிக்ககோரி 4 ஆவது ஞாயிறாகவும் போராட்டம்!