யாழ்.மாநகர ஆணையாளர் அலுவலகம் முன்பாக முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

யாழ் மாநகர சபை ஆணையாளர் மற்றும் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளை கண்டித்து மாநகர முதல்வர் மற்றும் உறுப்பினர்கள்
மாநகர ஆணையாளர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வு முதல்வர் விவேகானந்தராஜா மதிவதனி தலைமையில் இன்று (11) இடம்பெற்றது.

இதன்போது யாழ். மாகரசபை ஆணையாளர் மற்றும் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டன.

அமர்வைத் தொடர்ந்து, மாநகர ஆணையாளர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தப் போராட்டத்தில் யாழ்.மாநகர முதல்வர் பிரதி முதல்வர், உறுப்பினர்கள் என அனைவரும் கட்சிபேதமின்றி கலந்துகொண்டிருந்தனர்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version