யோஷித ,மற்றும் கரன்னாகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று(20) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால்
இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட
யோஷித ராஜபக்ச மற்றும் வசந்த கரன்னாகொட இருவரையும் நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version