யாழ்.சாவகச்சேரி நகர சபையின் மாதாந்த அமர்வு சபையின் தவிசாளர் வடிவேல் ஸ்ரீபிரகாஷ் தலைமையில் நேற்று (20) இடம்பெற்றது.
இதன்போது வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் வடக்கு மாகாண சபை நியதிச் சட்டங்களுக்கு முரணாக நகரசபைக்கு சுற்றுநிருபம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டை உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிசோர் முன்வைத்தார்.
வடக்கு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், செயலாளர்கள் ஊடாக இவ்வாறான விடயங்களை கையாள முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதனையடுத்து குறித்த சுற்று நிருபத்தில் வடக்கு மாகாண நியதிச் சட்டத்தில் இல்லாத விடயங்களை நிராகரிப்பதாக உறுப்பினர்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


மின்சாரக் கட்டணம் உயர்வு குறித்து ஏப்பிரலில் அறிவிக்கப்படும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!
மூடப்பட்ட வீதியை திறக்ககோரி போராட்டம்!
கொலை செய்யப்பட்ட சித்தமருத்துவபீட சமூகநலத்துறை தலைவரின் பூதவுடல் நல்லடக்கம்: சந்தேக நபர்களுக்கு இரண்டாம் திகதிவரை விளக்கமறியல்!
யாழ்.பல்கலை மாணவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமைக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்!