மன்னார் – நறுவிலிகுளத்தில் இடம்பெற்ற இறுதி ஊர்வலம் ஒன்றில், பூதவுடலை காளைகள் சுமந்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த காளைகளின் எஜமான் இயற்கை எய்தியிருந்தார்.


தான் இறந்தால், தனது உடலை காளைகள் பூட்டிய தனது மாட்டு வண்டியிலேயே எடுத்து செல்ல வேண்டும் என்பது அவனது விருப்பமாக இருந்தது.
இந்த நிலையில் நேற்று(07) இடம்பெற்ற அவரது இறுதி ஊர்வலம், அவரது விருப்பத்திற்கு ஏற்றவாறு காளைகள் பூட்டிய வண்டிலிலேயே இடம்பெற்றது.
எஜமானின் உடலை சுமந்து சென்ற காளைகளின் முகத்திலும் சோக உணர்வு காணப்பட்டது.
இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

வடக்கிற்கான புகையிரத சேவைகள் நாளை முதல் மீள ஆரம்பம்!
வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50 ஆம் ஆண்டு எழுச்சி மாநாடு யாழில்!
சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்புக்கும், பிரதமருக்குமிடையில் சந்திப்பு!
இன்று முதல் டீசல் விலை அதிகரிப்பு!