விசாமிகள் வைத்த தீயால் பல ஏக்கரில் தீ பரவல்: பயன்தரு மரங்கள் அழிவு!

யாழ்ப்பாணம் வேலணை, மண்கும்பான், சட்டி வீதியை அண்டிய பகுதியில் விசமிகள் மூட்டிய தீயால் பல ஏக்கர் வயல் நிலங்களில் தீ பரவியதோடு, பயன்தரு மரங்கள் பலவும் அழிவடைந்துள்ளன.

இந்தச் சம்பவம் நேற்று (10) பிற்பகலில் இடம்பெற்றுள்ளது.

அதனையடுத்து பிரதேச வாசிகள் சிலர் ஒன்றிணைந்து செயற்பட்டு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

யாழ் குடாநாட்டில் அதிகமான வெப்பநிலை நிலவிவரும் நிலையில் இவ்வாறான விசமிகளின் செயற்பாடுகள் பாரிய தீ அனர்த்தங்களை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இவ்வாறான நாசகர செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு
கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version