வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின்எண்ணிக்கை 235 பேர் ஆக உயர்வடைந்துள்ளது.
கரீபியன் கடற்கரை பகுதியான மோரோன் (Moron) நகருக்கு மேற்கே 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் நேற்று(25) ஏற்பட்டிருந்தன.
தலைநகர் கராகஸ் (Caracas) உட்பட பல பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியிருந்தன.
நாட்டின் முக்கிய நுழைவாயிலான சைமன் பொலிவர் சர்வதேச விமான நிலையம் பலத்த சேதமடைந்ததால் மூடப்பட்டுள்ளது.
கட்டட இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
அதனையடுத்து இடைக்கால ஐனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodriguez) நாட்டில் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

சாவகச்சேரி நகரசபை உப தவிசாளரை நீக்கியமையை கண்டித்து சாவகச்சேரியில் கடையடைப்பு போராட்டம்!
TIN நம்பர் பெற கால வரையறை விதிக்கப்படவில்லை: யாழ்.மாவட்ட அரச அதிபர் தெரிவிப்பு!
வவுனியா மாநகர சபை முதல்வர், சாவகச்சேரி நகரசபை உபதவிசாளர் பதவி நீக்கப்பட்டமைக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம்!
வடகொரியாவின் மிகப்பெரிய அதிநவீனப் போர்க்கப்பல் கடற்படையில் சேர்ப்பு!