வேகக் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பரந்தன் – பூநகரி வீதியில் குறித்த விபத்து இன்று(22) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி நோக்கி பயணித்த வேன் கட்டுப்பாட்டை இழந்து குடமுருட்டி பாலத்தில் மோதி குடைசாய்ந்துள்ளது.
விபத்திற்குள்ளான குறித்த வாகனத்தில் பயணித்த மூவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

மசகு எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம்!
வாகன இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடு: அமைச்சரவை அதிரடி முடிவு!
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிப்பு!
பேருந்து மோதி பொகந்தாலாவையில் இளம் குடும்பஸ்தர் பலி!