ஹோர்முஸ் நீரிணையில் வழமையான கப்பல் போக்குவரத்தை மீளக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஈரானிடம் உத்தியோகபூர்வமாக சீனா கோரிக்கை விடுத்துள்ளது.

சீன வெளிவுவகார அமைச்சர் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் ஆகியோருக்கு இடையில் நேற்று(15) தொலைபேசி உரையாடல் இடம்பெற்றது.
இந்த உரையாடலின் போதே ஹோர்முஸ் நீரிணை போக்குவரத்து விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை ஒரு சர்வதேச கடல் வழிப்பாதை என்பதால், அங்கு கப்பல் போக்குவரத்தின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
அதேவேளை, நீரிணையை அண்டியுள்ள நாடு என்ற ரீதியில் ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் சட்டபூர்வமான உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்.
பிராந்தியத்தில் அமைதி மற்றும் போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு சீனா தொடர்ந்தும் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கும் எனவும் சீன வெளிவிவகார அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

உயர்வடைந்த கடலோரம்: நிலநடுக்கத்தால் பிலிப்பைன்ஸில் ஏற்பட்டுள்ள பேரழிவு!
புகையிரத திணைக்கள இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்!
யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டம்!
மாகாண மட்ட குத்துச் சண்டைப் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு மூன்று தங்கமும், ஒரு வெள்ளியும்!