
பேரிடரின் போது பலரின் உயிர்களை காப்பாற்றிபேரிடரின் போது பலரின் உயிர்களை காப்பாற்றிய இளம் யுவதி திடீரென மரணம் அடைந்துள்ளார்.
சமீபத்திய வெள்ளத்தின் போது இடம்பெயர்ந்த தனது அயல் வீட்டு மக்களை காப்பாற்றவும், அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் கொண்டு செல்ல, இரவுபகலாக படகில் பணியாற்றி, பெரிய தியாகத்தை செய்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளார்.
கொழும்பு விசாகா வித்தியாலயத்தில் கல்விகற்று வந்த ஓஷாதி வியாமா என்ற 19 வயது யுவதியே உயிரிழந்துள்ளார்.
ஓஷாதி வியாமா, தனது 3 வயதிலிருந்தே நீச்சல் கற்றுக்கொண்டவர். அவர் தனது 7 வயதில் 14 நிமிடங்கள் 41 வினாடிகளில் களனி ஆற்றின் குறுக்கே 1000 மீட்டர் நீந்தி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.
ஓஷாதியின் சாதனையை காண கிராமவாசிகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் அன்றையதினம் களனி ஆற்றின் இருபுறமும் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



