பிரான்ஸில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நிரந்தர குடியுரிமை கோரும் தமிழர்கள் உட்பட்ட வெளிநாட்டவர்களுக்கு புதிய சட்டம் நடைமுறைக்கு வருகின்றது.
குடியுரிமை கோரும் அனைவரும் 45 நிமிடங்கள் கொண்ட இலத்திரனியல் பரீட்சையில் தோற்றி, 80 வீதப் புள்ளிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என உள்விவகார அமைச்சு அறிவித்துள்ளது.
நிரந்தர குடியிருப்பு அனுமதி
அதற்கமைய பல ஆண்டுகள் செல்லுபடியாகும் குடியிருப்பு அட்டை, நிரந்தர குடியிருப்பு அனுமதி கோருவருக்கு இந்த பரீட்சை கட்டாயமானதாகும்.
ஏற்கனவே குடியுரிமை பெற்றுவர்கள் மற்றும் பிரான்ஸில் அகதி அந்தஸ்து கோரியுள்ளவர்களுக்கு இது பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் குடியரசின் மதிப்புகள், உரிமைகள் மற்றும் கடமைகள், அரசியல் அமைப்பு, வரலாறு, பண்பாடு மற்றும் சமூக வாழ்க்கை போன்ற ஐந்து தலைப்புகளில் 40 கேள்விகள் கேட்கப்படும்.
பிரெஞ்சு மொழியில் தேர்ச்சி
நிரந்தர குடியுரிமைக்காக B2 மொழித் தரம் பெற்றிருப்பது அவசியமாகும். இது பல்கலைக்கழகத்தில் சேர தேவையான அதே தகுதியாகும்.
அரசியல் கருத்துகளைப் புரிந்துகொள்ள பிரெஞ்சு மொழியில் நல்ல தேர்ச்சி அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரான்ஸில் குடியுரிமை பெற காத்திருக்கும் தமிழர்கள் பரீட்சைக்கான தகுதியை வளர்த்துக் கொள்வது இன்றியமையாததாகும்.
ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு வருகின்ற நிலையில் பிராஸ் அரசின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.


மன்னிப்பு கோரிய பிரான்ஸின் முதல் பெண்மணி!
சிட்னி – போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்த ‘ஹீரோ’!
கொலம்பியாவில் பேருந்து பள்ளத்தாக்கில் வீழ்ந்ததில் 17 பேர் பலி!
ஜப்பானில் 6.7 ரிக்டரில் நிலநடுக்கம்!