சாவகச்சேரி நகரசபையின் பாதீடு 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சபை ஆரம்பத்தில், நாட்டில் அண்மையில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்த மக்களுக்கு சபையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சாவகச்சேரி நகரசபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை தவிசாளர் வடிவேல் ஸ்ரீபிரகாஸ் இன்று(22) சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார்.
தொடராக, பாதீடு தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

இதன்போது பாதீட்டுக்கு ஆதரவாக 14 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
தமிழரசுக் கட்சியின் 06 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் 05 உறுப்பினர்களும், ஜனநாய க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 02(இரு) உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஒரு உறுப்பினரும் ஆதரவாக வாக்களித்தனர்.
எதிராக தேசிய மக்கள் சக்தியின் 3 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
18 உறுப்பினர்களை கொண்ட சாவகச்சேரி நகர சபையில், அகில இலங்கை தமிழ் காங்கிராஸின் 06 உறுப்பினர்களில் ஒரு உறுப்பினர் நீதிமன்ற உத்தரவின்பேரில் நீக்கப்பட எஞ்சியிருந்த 05 உறுப்பினர்களைக் கொண்டும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரு உறுப்பினர்களைக் கொண்ளோடும் குலுக்கல் முறை மூலம் ஆட்சியமைக்கப்பட்டது.

அதனடிப்படையில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் வடிவேல் ஸ்ரீபிரகாஸ் தவிசாளராகவும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஞானப்பிரகாசம் கிசோர் உப தவிசாளராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
அந்த நிலையில், இன்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்ட பாதீடு மேலதிக 11 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானம்!
வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தலைவராக கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன்!
யாழ்.மாவட்ட செயலக புதுவருட கடமைகள் ஆரம்பம்!
ஜெஹான் பெர்னாண்டோவுக்கு 09 வரை விளக்கமறியல்!