இந்தோனேஷிய தீவிபத்தில் 16 பேர் பலி!

இந்தோனேஷியா – சுலவேசி தீவிலுள்ள மனாடோ நகரிலுள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதோடு 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று (28) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

முதியோர் இல்லத்தில் இருந்த 12 பேர் எதுவித காயங்களுமின்றி காப்பாற்றப்பட்டுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Exit mobile version