கொடிகாமம் சந்தையின் மரக்கறிச் சந்தை புதிய கட்டடத்துக்கு மாற்றம்!

யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பொதுச்சந்தையின் மரக்கறி வியாபாரப் பகுதி புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

அதற்கான நிகழ்வு
சாவகச்சேரி பிரதேச சபைத் தவிசாளர் தலைமையில் இன்று(29) காலையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில், பிரதேச சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் சந்தை வியாபாரிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இயங்கு நிலையற்றிருந்த கட்டடம் ஒன்றை சாவகச்சேரி பிரதேச சபை, மரக்கறி வியாபாரத்திற்கு ஏற்ற வகையில் புனரமைப்புச் செய்து
மரக்கறி வியாபார தொகுதியாக மாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version