மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்க போர் விமானங்கள் தனது வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் தடை விதித்துள்ளது.
சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சுவிட்சர்லாந்தின் ‘நடுநிலை’ கொள்கையின்படி, போரில் ஈடுபடும் எந்தவொரு தரப்பும் இராணுவ நோக்கங்களுக்காகத் தனது வான்வெளியைப் பயன்படுத்த அனுமதி வழங்க முடியாதென பெடரல் கவுன்சில் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவால் சமர்ப்பிக்கப்பட்ட ஐந்து விமானப் பயணக் கோரிக்கைகளில், இராணுவ நடவடிக்கைகளுடன் நேரடியாகத் தொடர்புடையதாகக் கருதப்படும் இரண்டு உளவு விமானங்களுக்கான அனுமதியை சுவிட்சர்லாந்து அரசாங்கம் அதிரடியாக நிராகரித்துள்ளது.
எவ்வாறாயினும், போருடன் நேரடித் தொடர்பில்லாத மனிதாபிமானப் பணிகள், மருத்துவ உதவிப் போக்குவரத்து மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக ஏனைய மூன்று விமானங்களுக்கு மட்டும் வான்வெளியைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு கடவத்தையில் விபத்து :ஒருவர் பலி!
ஈரான் கடுமையான நெருக்கடிகளை சந்தித்துள்ளது: அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு!
பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடல் !
செம்மணி சிந்துபாத்தியிலிருந்து இதுவரை 412 என்புக் கூடுகள் அடையாளம்!