பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடல் !

பொசன் பூரணை போயா தினம் மற்றும் தேசிய பொசன் வாரத்தை முன்னிட்டு, நாடு முழுவதிலுமுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.பி.என்.ஏ. பிரேமரத்ன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இதன்படி, ஜூன் 29 ஆம் திகதி பொசன் போயா தினத்தை முன்னிட்டு, ஜூன் 28 ஆம் திகதி இரவு முதல் ஜூன் 30 ஆம் திகதி காலை வரை மதுபான கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேசிய பொசன் வாரத்தை முன்னிட்டு, ஜூன் 26 முதல் ஜூலை 2 வரை அநுராதபுரத்தை சூழவுள்ள4 பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள மதுபானசாலைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version