சாவகச்சேரி வாரிவனம் முத்துமாரியம்மன் இன்று தேர்!

யாழ் சாவகச்சேரி வாரிவனம் முத்துமாரியம்மன் ஆலய தேர் திருவிழா இன்று(07) சிறப்பாக இடம் பெற்றது.

இன்று காலை ஏழு மணி அளவில் இடம்பெற்ற வசந்த மண்டப பூசையை அடுத்து அம்மன் தேரேறிக் காட்சியளித்தார்.

காவடி, கற்பூர சட்டி மற்றும் பாற்குடம் எடுத்து பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன்களை நிறைவு செய்தனர்.

இதேவேளை, நாளை தினம் தீர்த்தத் திருவிழாவும், நாளை மறுதினம் பூங்காவன திருவிழாவும் இனம்பெறவுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version