அரியாலையில் ரயிலுடன் மோதுண்டு இளைஞர் படுகாயம்!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடன் மோதுண்டு இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

இந்த சம்பவம் யாழ்.அரியாலைப் பகுதியில் இன்று(10) முற்பகலில் இடம்பெற்றுள்ளது.

தண்டவாளத்தை குறுக்கறுத்து வீதியை கடக்க முற்பட்டபோதே விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தில், முத்தமிழ் வீதி,யாழ்ப்பாணத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்த இளைஞர் யாழ்போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version