ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பாக முன்னாள் புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சாலேவுக்கு முழுமையான தகவல்கள் தெரிந்திருந்த்து என்பதற்கான வலுவான ஆதாரங்கள் இருப்பதாலேயே அவர் கைது செய்யப்பட்டதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு நேற்று(08) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஒரு வருட காலமாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மிகவும் வெளிப்படைத்தன்மையுடனும், நியாயமானதாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அந்த விசாரணைகளில், ஈஸ்டர் தாக்குதல் குறித்த தகவல் முன்னாள் புலனாய்வுப் பிரிவின் தலைவருக்கு முற்கூட்டியே முழுமையாக தெரிந்திருந்தமை தெளிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், விசாரணைகளுக்குத் தேவையான நபர்களைக் கைது செய்யவும், தடுத்து வைக்கவும் பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளதெனவும்,சுரேஷ் சாலே குற்றவாளியா, இல்லையா என்பதை நீதிமன்றமே தீர்மனிக்கும் எனவும்
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார்.

துபாய் வாகன விபத்தில் 7 இந்தியர்கள் பலி!
எரிபொருள் ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாளை மற்றும் நாளை மறுதினங்களில் இலங்கை வரும்!
கொழும்பில் உணவகத்தில் ஏற்பட்ட தீயால் மூவர் பலி: ஒருவர் வைத்தியசாலையில்!
காங்கேசன்துறை முதல் கற்பிட்டிவரை கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை!