இத்தாவிலில் ரயிலுடன் மோதுண்டு குடும்பஸ்தர் பலி!

பளை இத்தாவில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ரயிலுடன் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று(23) பிற்பகல் 2.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் நல்லூரை சேர்ந்த 51 வயதுடைய ரத்னராசா கிருஷ்ணமோகன் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Exit mobile version