இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து புங்குடுதீவு மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புங்குடுதீவு ஆலடி சந்தியில் இருந்து இன்று (19) காலை 11
மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.


நேற்று முன்தினம் புங்குடுதீவு மீனவர்கள் நெடுந்தீவிற்கு அண்மித்த பகுதியில் நண்டு வலைகளை வீசிவிட்டு காத்திருந்த போது, இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து 75 இலட்சம் ரூபா மீனவர்களின் வலைகளை அறுத்து சென்றுள்ளனர்.

இந்திய மீனவர்களின் இந்த அத்துமீறலை கண்டித்து புங்குடுதீவு ஆலடி சந்தியில் ஒன்று கூடிய புங்குடுதீவு மீனவர்கள் வீதி வழியாக புங்குடுதீவு வாடி வரைக்கும் ஊர்வலமாக சென்று, கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொழும்பில் ரயிலில் மோதுண்டு இளைஞன் பலி!
FIFA உலக கிண்ணப் போட்டியில் சம்பியனானது ஸ்பெய்ன் அணி!
செம்மணி மனித புதைகுழி அகழ்வில் நேற்று 9 என்புக்கூடுகள் அடையாளம்!
யாழ் மாவிட்டபுரம் கந்தனுக்கு இன்று கொடியேற்றம்!