இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் 20 திகதி ஆரம்பம்!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 20ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளன.

தமிழ் – சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு கடந்த 11ஆம் திகதி முதல் அனைத்துப் பாடசாலைகளுக்கும் 9 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், மீண்டும் அனைத்துப் பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன.

இதேவேளை, எதிர்வரும் ஜீலை மாதம் 24ஆம் திகதி வரை இந்த தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version