சுற்றுலாச் செல்வதற்கு இலங்கை அதிக அபாயமுள்ள நாடாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளதாக வெளியான தகவல்களை இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய உயர்தானிகராலயம் மறுத்துள்ளது.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் Paul Stephens, அவுஸ்திரேலிய அரசின் அதிகாரப்பூர்வ பயண ஆலோசனைகளில் இலங்கை குறித்து எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் அரசியல் மற்றும் பாதுகாப்பு பதற்றத்தை முன்னிட்டு இலங்கை சுற்றுலாவிற்கு அபாயமான நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
ஆனால் அவை தவறான புரிதலின் அடிப்படையில் வெளியானவை என உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவுஸ்திரேலிய பிரஜைகள் இலங்கைக்கு பயணம் செய்வதற்கு தொடர்பான எந்த விசேட பாதுகாப்பு எச்சரிக்கையும் இதுவரை விடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவுஸ்திரேலிய அரசின் உத்தியோகபூர்வ பயண ஆலோசனைகள் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்களின் மூலமே வெளியிடப்படும் என்றும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் அவுஸ்திரேலிய உயர்தானிகர் கேட்டுக்கொண்டுள்ளார்

சுரேஷ் சாலே விடயத்தில் “விசித்திரமான சட்டம்” – தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு!
தாக்குதலுக்குள்ளான ஈரான் விமான நிலையம்!
‘வடக்கின் போர்’ கிரிக்கெட் தொடரில் யாழ் மத்திய கல்லூரி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!
யாழ் உரும்பிராய் எரிபொருள் நிலையத்தில் தீ விபத்து