இலங்கை போக்குவரத்து சபையினால் வரலாற்றில் முதன் முறையாக இன்று (06) பெண்கள் நடத்துனர்களாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர்.
மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 20 பெண் நடத்துனர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன் போது நியமனம் பெற்ற பெண் நடத்ததுனர்களுக்கு புதிய சீருடையும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கெளசல்யா அரியரத்னா, நாடாளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ கனகரட்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோட்டை புகையிரத நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்துதல் திட்டம்: பிரதமர் தலைமையில் ஆரம்பித்து வைப்பு!
சகோதரனின் கத்திக் குத்துக்கு இலக்கான பெண் மரணம்!
பொம்மைக்குள் போதைப்பொருள் கடத்தல்: பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் கைது!
லெபனான் மீது தாக்குதல் தொடர்ந்தால் போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து: ஈரான் கடும் எச்சரிக்கை!