இலங்கை போக்குவரத்து சபையினால் வரலாற்றில் முதன் முறையாக இன்று (06) பெண்கள் நடத்துனர்களாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர்.
மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 20 பெண் நடத்துனர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன் போது நியமனம் பெற்ற பெண் நடத்ததுனர்களுக்கு புதிய சீருடையும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கெளசல்யா அரியரத்னா, நாடாளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ கனகரட்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிரித்தானிய இளநிலை வெளிவிகார அமைச்சராக உமா குமரன் நியமனம்!
ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக இடை நிறுத்திய டொனால்ட் ட்ரம்ப்!
வலப்பனையில் காட்டுத் தீ பரவல்:10 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி தீக்கிரை!
சிம்பாவே – இந்திய அணிகளிடையிலான 2ஆவது T20 இல் இந்தியா வெற்றி!