இலங்கை போக்குவரத்து சபையினால் வரலாற்றில் முதன் முறையாக இன்று (06) பெண்கள் நடத்துனர்களாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர்.
மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 20 பெண் நடத்துனர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன் போது நியமனம் பெற்ற பெண் நடத்ததுனர்களுக்கு புதிய சீருடையும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கெளசல்யா அரியரத்னா, நாடாளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ கனகரட்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறுக்கு வழியில் வந்தவர்களே தமிழரசுக் கட்சியை நடத்துகிறார்கள்!
சாவகச்சேரி சந்தையில் அமையவுள்ள புதிய வர்த்தக கட்டட தொகுதிக்கு அடிக்கல் நாட்டி வைப்பு!
க.பொ.த.சாதாரண தர பரீட்சை ஏற்பாடு தயார்!
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மூத்தமகள் கைது!