மத்திய கிழக்கில் நிலவிவரும் மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில், ஈரானுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தைகளின் தற்போதைய முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடாத்தத் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து இராணுவத் தாக்குதல்களையும் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு அமெரிக்க பாதுகாப்பு தரப்புக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
தனது ‘TruthSocial’ தளத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், ஈரானுடனான இந்த விரிவான மற்றும் ஆழமான பேச்சுக்கள் இந்த வாரம் முழுவதும் தொடரும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளின் வெற்றியைப் பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய கிழக்கில் நீண்டகாலமாக நிலவி வரும் பகையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு முக்கிய இராஜதந்திர நகர்வாக இந்தத் திடீர் அறிவிப்பு சர்வதேச அளவில் பார்க்கப்படுகிறது.

தனியார் போக்குவரத்து சங்கங்கள் சில சேவைப் புறக்கணிப்பில்!
ஹார்முஸ் நீரிணையைத் திறக்க ஐரோப்பிய ஒன்றியம் முயற்சி!
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கை வருகை!
ஈழப் பெண்ணின் உலக சாதனை!