காட்டுத்தீயால், ஸ்பெயின் மற்றும் பிரான்ஸிலிருந்து பல்லாயிரக் கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இரு நாடுகளிலிருந்தும் இதுவரை 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஐரோப்பியக் கண்டத்தில் பலத்த காட்டுத்தீ தொடர்ந்து வரும் நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் சுமார் 25 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதோடு, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஊரடங்கு போன்று வீடுகளுக்குள்ளேயே இருக்கும் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு, தென்மேற்கு பிரான்ஸின் ஜிரோண்ட் பிராந்தியத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாகக் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 44 ஆயிரத்திற்கும் இற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்தக் காட்டுத்தீயால் இதுவரை 12 ஆயிரத்து 500 ஹெக்டேயர் காடுகள், 53 வீடுகள் மற்றும் ஒரு சுற்றுலா முகாம் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13ஆவது வாரமாக தொடரும் பலாலி மக்களின் காணிவிடுவிப்பு போராட்டம்!
பயணிகளோடு காணாமல் போன கப்பல் கண்டுபிடிப்பு: 140 பேர் மாயம் :ஒருவர் பலி!
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி யாழில் ஆர்ப்பாட்டப் பேரணி!
ஆசிய மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை – இந்திய அணிகள் இன்று களத்தில்!