ஈரான் நாட்டு கப்பலிலிருந்த 204 பேரும் கொழும்பிற்கு!

கொழும்பை அண்டிய சர்வதேச கடற்பரப்பில் தரித்துநின்ற
ஈரான் நாட்டு (IRIS Bushehr) கப்பலிலிருந்த 204 பேரும் கொழும்பு துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதனை இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஈரான் நாட்டு IRIS Bushehr கப்பல் பாதுகாப்பாக திருகோணமலை துறைமுகத்துக்கு கொண்டு செல்லும் நடவடிக்கை இடம்பெற்றுவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஈரான் கடற்படைக் கப்பல், முன்தாகவே இலங்கைக்குள் நுழைவதற்கான அனுமதியை கோரியிருந்தது.

இந்த நிலையில், மனிதாபிமான கொள்கையை அடிப்படையாகக் கொண்டு அதற்கு அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்ததாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நேற்றைய ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version