எமது நாட்டின் பண்பாடு உலகிற்கு எமது நாட்டை அடையாளப்படுத்திக் காட்டுவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தனது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மாற்றம் பெறுவதை அடையாளப்படுத்தும் சிங்கள, தமிழ் புத்தாண்டானது, இந்நாட்டு மக்களின் பிரதான கலாசார விழாவாகும்.
பாரம்பரிய சம்பிரதாயங்களைப் பாதுகாத்து, சுபநேரச் சடங்குகளுக்கும் சமயக் கிரியைகளுக்கும் முன்னுரிமை அளித்து, கூட்டாக ஒரே சுபநேரத்தில் சிங்கள தமிழ்x புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
இந்தப் பண்பாட்டுப் பகிர்வு உலகிற்கு முன்னால் எமது நாட்டின் அடையாளத்தையும், எமது சமூகங்களுக்கு இடையே நிலவும் சமூக-கலாசார பிணைப்பையும் சிறப்பாகப் பிரதிபலிக்கிறது.
மலர்ந்திருக்கும் தமிழ் – சிங்கள புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி தருவதாய் அமையட்டும் ” என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் கிண்ணத்தை தனதாக்கியது பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணி!
வெசாக் தோரணைகளில் யாழ்.பொலிஸ் நிலையத் தோரணை முதலிடம்!
வெசாக் தோரணை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியதில் அறுவர் பலி: 12 பேர் காயம்!
மியன்மாரில் சுரங்க வெடிபொருட்கள் வெடித்ததில் 46 பேர் பலி!