இலங்கைக்குச் சொந்தமான 42 ஆயிரம் மெற்றிக் தொன் எரிவாயு மாலைதீவில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி,ஏப்ரல் மாதத்திற்கான தேவையைப் பூர்த்தி செய்ய இந்த அளவு போதுமானது என நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.


இதேவேளை, இந்த கையிருப்பை கூடிய விரைவில் நாட்டிற்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், மே மாதத்திற்குத் தேவையான 33 ஆயிரம் மெற்றிக் தொன் எரிவாயுவை கொண்ட கப்பல் ஒன்று ஏப்ரல் 25 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ளதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், 7 ஆயிரம் மெற்றிக் தொன் எரிவாயுவை கொண்ட கப்பல் ஒன்று ஏப்ரல் 4 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என எதிர்பார்ப்பதாக லாக்ஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நலிந்த குருகுலசூரிய தெரிவித்துள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் கிண்ணத்தை தனதாக்கியது பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணி!
வெசாக் தோரணைகளில் யாழ்.பொலிஸ் நிலையத் தோரணை முதலிடம்!
வெசாக் தோரணை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியதில் அறுவர் பலி: 12 பேர் காயம்!
மியன்மாரில் சுரங்க வெடிபொருட்கள் வெடித்ததில் 46 பேர் பலி!