இலங்கையில் கடந்த நான்கு மாதங்களில் போதைப் பொருட்களுடன் ஒரு இலட்சத்து இரண்டாயிரத்து தெள்ளாயிரம் பேர் (102,900)
கைது செய்யப்பட்டுள்ளனர்.
15 இலட்சத்துக்கும் அதிகமானோரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எவ்.யு.வூட்லர் தெரிவித்தார்.
இதன்போது, 526 கிலோகிராம் ஹெரோயின், 1,419 கிலோ கிராம் ஐஸ், 3,548 கிலோ கிராம் கஞ்சா ஆகியன மீட்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது கைது செய்யப்பட்ட 2,400 சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் 20 திகதி ஆரம்பம்!
ஹோர்முஸ் நீரிணை போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவருமாறு ஈரானிடம் வலியுறுத்தியது சீனா!
வழமைக்குத் திரும்பிய எரிவாயு விநியோகம்!
தான் கண்டெடுத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த யாழ்.பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர்!