கடலுக்கு சென்று காணாமல் போன ஊரணி மீனவர்களை மீட்டு எல்லையில் சேர்த்த இந்திய மீனவர்கள்!

யாழ்.காங்கேசன்துறை ஊரணி கடற்பரப்பிலிருந்து கடலுக்கு சென்று காணாமல் போன மீவர்கள் இருவரையும் கண்டுபிடித்த இந்திய மீனவர்கள் அவர்களை இலங்கை எல்லைவரை கொண்டுவந்து சேர்த்துள்ளனர்.

குறித்த மீனவர்கள் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை கடலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர்.

இந்தநிலையில் உறவினர்களால் பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டபோதிலும் அவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்தநிலையில் குறித்த இரு மீனவர்களையும் மீட்ட இந்திய மீனவர்கள் அவர்களுக்கு உணவும் நீரும் வழங்கி இலங்கை கடல் எல்லைக்குள் சேர்த்துள்ளனர்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version