காங்கேசன்துறை முதல் கற்பிட்டிவரை கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை!

காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமாக அதிகமாக காணப்படுவதால் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

குறித்த கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால், மறு அறிவித்தல் வரும் வரை கடற்பரப்புகளில் பயணிப்பதையும், கடற்றொழிலுக்குச் செல்வதையும் தவிர்க்குமாறு கடற்படையும், வளிமண்டலவியல் திணைக்களமும் இணைந்து எச்சரிக்கை விடுத்துள்ளன.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version