காசாவிலுள்ள உணவகம் மீது இஸ்ரேல் ஆளில்லா விமானம் தாக்குதல்!

காசா நகருக்கு மேற்கேயுள்ள துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றை இலக்கு வைத்து இஸ்ரேல் நடாத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில், குழந்தை உட்பட ஐவர் உயிரிழந்துள்ளனர்.

இதன்போது சிலர் கடலுக்குள் தூக்கி வீசப்பட்டதாகவும், அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காசா தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் அல்-ஷிஃபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version