கொழும்பு – காலிமுகத்திடல் நீராடிய மாணவர்களில் ஒருவர் பலி: இன்னொருவர் மாயம்!

காலிமுகத்திடல் கடலில் நீராடச் சென்ற ஆறு மாணவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (10) மாலை இடம்பெற்றுள்ளது.

காலிமுகத்திடல் கடலில் 6 மாணவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஐந்து மாணவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அதில் மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொலிசார் மற்றும் உயிர் காப்பு அதிகாரிகளும் காணாமல் போன மாணவனை தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version