2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாதம் 15 ஆம் திகதிக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கான ஆயத்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், அதிகாரிகள் வெளியிடுவதற்கு முன்னதாக ஆவணங்களை இறுதிப் பரிசீலனை செய்து வருவதாகவும் பிரதிக் கல்வி அமைச்சர் டொக்டர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நடத்தப்பட்ட நிலையில் நாடளாவிய ரீதியில் மொத்தமாக நான்கு லட்சத்து ஐம்பத்தொராயிரத்து நானுற்று அறுபத்து மூன்று மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

பிரித்தானிய இளநிலை வெளிவிகார அமைச்சராக உமா குமரன் நியமனம்!
ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக இடை நிறுத்திய டொனால்ட் ட்ரம்ப்!
வலப்பனையில் காட்டுத் தீ பரவல்:10 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி தீக்கிரை!
சிம்பாவே – இந்திய அணிகளிடையிலான 2ஆவது T20 இல் இந்தியா வெற்றி!