யாழ்.சாவகச்சேரி பொதுச்சந்தை வளாகத்தில் அமையவுள்ள வியாபார கடைத் தொகுதிக்கான
அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(06) இடம்பெற்றது.


சாவகச்சேரி நகரசபையின் 118 மில்லியன் ரூபா நிதியில் குறித்த கட்டடத் தொகுதி அமையவுள்ளது.
சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் வடிவேல் ஸ்ரீபிரகாஷ் தலைமையில் குறித்த அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.


நிகழ்வில், தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரான்சிஸ் சந்திரா சத்தியசோதி, சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத் தலைவர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி, சாவகச்சேரி நகரசபை உபதவிசாளர் ஞா.கிஷோர், நகரசபை செயலாளர் செ.நிசான்,


சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ரஜனிகாந்தன், நகரசபை உறுப்பினர்கள் அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.

13ஆவது வாரமாக தொடரும் பலாலி மக்களின் காணிவிடுவிப்பு போராட்டம்!
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி யாழில் ஆர்ப்பாட்டப் பேரணி!
ஆசிய மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை – இந்திய அணிகள் இன்று களத்தில்!
தேர்தல் வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்து சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்!