சாவகச்சேரி நகரசபை முன்னாள் உப தவிசாளரின் இடைக்கால உத்தரவு கோரி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி!

சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர்
பதவி மற்றும் நகரசபை உறுப்புரிமையிலிருந்து தன்னை நீக்கி வட மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக் கோரியும், அதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும்,ஞானப்பிரகாசம் கிசோரால், தாக்கல் செய்யப்பட்ட வழக்கை யாழ்.மேல் நீதிமன்றம் இன்று(19) தள்ளுபடி செய்துள்ளது.

கட்டளைக்காக இன்றைய தினம் வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் வடக்கு மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை ஏற்று இந்த வழக்கை
யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி சின்னத்துரை சதீஸ்தரன் தள்ளுபடி செய்துள்ளார்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version