சிறைச்சாலையிலுள்ள கைதிகளை பார்வையிடும் பார்வையாளர்கள் கைதிகளுக்கு உணவு மற்றும் இனிப்புகளை இன்று (25) வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மத விழாவைக் குறிக்கவும், கைதிகளின் மன உறுதியை உயர்த்தவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையாளருமான ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள சிறை விதிமுறைகளுக்கு இணங்க, ஒரு கைதிக்கு போதுமான அளவு உணவு அல்லது இனிப்புகளை பார்வையாளர்கள் கொண்டு வர அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த விசேட ஏற்படு நாடு முழுவதுமுள்ள அனைத்து சிறைச்சாலைகளுக்கும் பொருந்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பார்வையாளரின் வருகைகளின் போது பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு சிறை அதிகாரிகள் பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

எரிபொருள் ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாளை மற்றும் நாளை மறுதினங்களில் இலங்கை வரும்!
கொழும்பில் உணவகத்தில் ஏற்பட்ட தீயால் மூவர் பலி: ஒருவர் வைத்தியசாலையில்!
காங்கேசன்துறை முதல் கற்பிட்டிவரை கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை!
நீர்கொழும்பில்ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதுண்டதில் இருவர் பலி!