இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் (Julie Chung)க்கும், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக பணியற்றிய ஜூலி சாங்,தனது சேவையை நிறைவு செய்து எதிர்வரும் 16 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார்.
இந்த நிலையில் இந்தச் சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று(12) இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஜூலி சாங், தனது பதவிக்காலத்தில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்காக மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளுக்காக ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.
மேலும், ‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்குவதற்காகவும், சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தைகளின் போது அவர் வழங்கிய விசேட பங்களிப்பிற்கும் ஜனாதிபதி பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

யாழ் நகர அபிவிருத்தி தொடர்பாக ஆராய்ந்தபிரதி அமைச்சர் எரங்க குணசேகர!
வசந்த கரன்னாகொட, யோஷிதவுக்கு எதிரான ஊழல் வழக்கில் முன்விளக்க மாநாட்டிற்கு அழைக்குமாறு உத்தரவு!
எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!
தமிழீழக் கோரிக்கையை எதிர்க்கும் அர்ச்சுனா எமது மேடைகளில் இருப்பதில் தவறில்லை – உதய கம்மன்பில தெரிவிப்பு!