தாக்குதலுக்குள்ளான ஈரான் விமான நிலையம்!

ஈரானின் மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது இன்று(07) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மெஹ்ராபாத் விமான நிலையம் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

தாக்குதல் நடந்தபோது விமான நிலையத்தில் பல விமானங்கள் இருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தாக்குதலைத் தொடர்ந்து விமான நிலைய பகுதி புகை மண்டலாக காட்சியளித்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன

இதேவேளை, விமான நிலையத்தில் பல இடங்கள் எதிரிகளால் குறிவைக்கப்பட்டிருப்பதை ஈரானிய அரசு ஊடகமும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version