திருகோணமலையில் விபத்து : 13 பேர் படுகாயம்!

திருகோணமலை -கிண்ணியா- கங்கை பாலத்தருகில் தனியார் பேருந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 23 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று (22) மாலை இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையிலிருந்து மூதூர் நோக்கி பயணித்த தனியார் பேருந்து பாதையை விட்டு விலகி மரத்துடன் மோதியுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த 23 பேர் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version