இலங்கை சம சமாஜவாய கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மறைந்த பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடலுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மறைந்த பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் இறுதிச் சடங்கு, நாளை மறுநாள் (16) பொரளை பொது மயானத்தில் நடைபெறவுள்ளது.
அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக நாள் முழுவதும் பொரளையிலுள்ள என்.எம். பெரேரா மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று (13) கோட்டே, நாவல வீதியிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார். உயிரிழக்கும்போது அவருக்கு வயது 92 ஆகும்.

நாட்டில் மின்வெட்டை தவிர்ப்பதற்கான உபாயங்களை ஆராய்கிறது ஈரான்!
லண்டன் கார் விபத்தில் யாழ் இளைஞன் பலி: இருவர் படுகாயம்!
வெளிநாடுகளிலுள்ள குற்றக் குழுவைச் சேர்ந்த 226 பேருக்கு சர்வதேச சிவப்பு அறிவிப்பு!
இந்தியன் பிரீமியர் லீக் கின் 68 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி!