தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட இராணுவப்சிப்பாய் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் யாழ் சாவகச்சேரி தம்பு தோட்டத்தில் அமைந்துள்ள 523 ஆவது இராணுவப் படைப்பிரிவு முகாமில் இடம் பெற்றுள்ளது.
இன்று(28) காலை 6 மணி அளவில் குறித்த இராணுவ சிப்பாய் தன்னைத் தானே சுட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குருநாகல் பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய எச்.எம்.டபிள்யூ.பீ. பண்டார என்ற சிப்பாய் படுகாயமடைந்தவராவார்.
வயிற்றுப் பகுதியில் படுகாயம் அடைந்த ராணுவ சிப்பாய் சாவகச்சேரி ஆதார் வைத்து சிலை அமைக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
துப்பாக்கி சூட்டுக்கான காரணம் அறியப்படாத நிலையில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

தரவுப் பாதுகாப்புச் சட்டம், தகவல் உரிமைச் சட்டத்தை முடக்குவதாக டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்!
T20 கிரிக்கெட்டில் 15 வயது ருவாண்டா வீராங்கனை உலக சாதனை!
யாழ்.வட்டுக்கோட்டை வைத்தியசாலை முன்பாக போராட்டம்!
யாழ்.பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் கொலை: மகளும் மருமகனும் கைது!