சாவகச்சேரி நகராட்சி மன்றமும், யாழ்.இந்திய துணைத்தூதரகமும் இணைந்து நடாத்திய “தென்னிந்திய கலைஞர்களின் சாஸ்திரிய ஆற்றுகை” நிகழ்வு சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில் நேற்றிரவு (27) சிறப்பாக இடம்பெற்றது.



இந்த நிகழ்வுக்கு யாழ். இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
நிகழ்வில் தென்னிந்திய கலைஞர்களின் மோகினியாட்டம் மற்றும் கதகளி ஆகிய ஆற்றுகைகள் இடம்பெற்றன.




கலைமாமணி ரஷ்மி மேனன் தலைமையில் மோகினி ஆட்டமும், கலாஸ்ரீ ஏவூர் ராஜேந்திரபிள்ளை தலைமையில் கதகளியும் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து இந்திய கலைஞர்கள் கெளரவிக்கப்பட்டனர்.

யாழுக்கு 20 க்கு 20 உலக கிண்ணம் கொண்டுவருகை!
இணுவில் கந்தன் ஆலயத்தில் பாற்குட பவனி!
நடனத்துறையில் பிரகாசித்துவரும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த றெஜிஸ்ரிகா!
சாவகச்சேரி நகராட்சி மன்றமும்,கைத்தொழில் வணிகர் மன்றமும் இணைந்து நடாத்திய பொங்கல் விழா!