தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் (National Cadet Corps) 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த விளையாட்டுப் போட்டிகள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றுவருகின்றன.



நேற்றைய(18) இரண்டம் நாள் போட்டியில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.
தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஏ.பி.கே.பிரேமதிலக தலைமையில் நேற்று முன்தினம் இந்தப் போட்டிகள் ஆரம்பமாகியிருந்தது.



இந்நிலையில் விளையாட்டரங்குக்கு வருகை தந்த ஆளுநரை, தேசிய மாணவர் படையணியின் அதிகாரிகள் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் பார்வையிட்டார்.


தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் விளையாட்டுத் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் இதன்போது நடைபெற்றன.
இந்தநிகழ்வில் தேசிய மாணவர் படையணியின் உயர் அதிகாரிகள், பயிற்றுவிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.


யாழ்.மாநகர சபையிடம் தீயணைப்பு வாகனங்கள் இல்லை: அனர்தம் ஏற்பட்டால் பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் – மாநகர உறுப்பினர் உதயசிறி எச்சரிக்கை!
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேராளர் மகாநாடு சாவகச்சேரியில்!