நானுஓயா-ரதல்ல திடீர் விஜயம்: தோட்டத் தொழிலாளர்களை நேரில் சந்தித்த ஜனாதிபதி

நானுஓயா- ரதெல்ல பகுதிக்கு திடீரென விஜயம் செய்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தோட்டத் தொழிலாளர்களோடு கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பு இன்று(11) காலை இடம் பெற்றது.

ஜனாதிபதி திடீரென மேற்கொண்ட விஜயத்தை அடுத்து அப்பகுதி மக்கள் திரண்டு அவருக்கு உற்சாகமான வரவேற்பை வழங்கினர்.

இதே நேரத்தில் சம்பள உயர்வுக்காக ஜனாதிபதிக்கு நன்றியை தெரிவித்தனர்.

Exit mobile version